Type Here to Get Search Results !

இயல்-6-ஆறாம் வகுப்பு-கூடித் தொழில் செய்

கூடித் தொழில் செய்-இயல்-6

koode tholel shei eyal-6
table of contents(toc)

நானிலம் படைத்தவன்

  கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப்           பெருவெளியை
    மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி
    ...அஞ்சுவதை அஞ்சி அகற் றி விலக்கிடுவான்
- முடியரசன்

சொல்லும் பொருளும்

  • மல்லெடுத்த   – வலிமைபெற்ற 
  • மறம்                – வீரம்
  • சமர்                 – போர் 
  • எக்களிப்பு      – பெருமகிழ்ச்சி
  • நல்கும்           – தரும் 
  • கலம்               – கப்பல் 
  • கழனி             – வயல்  
  • ஆழி             - கடல் 

பொதுவான குறிப்புகள்

  • முடியரசனின் இயற்பெயர் துரைராசு. 
  • பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களைஎழுதியுள்ளார்.  
  • திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர்.  
  • படைப்பு- புதியதொரு விதி செய்வோம் 
  வெள்ளிப் பனிமலையின் மீதுஉலாவுவோம் – அடி 
    மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவவோம்
    ....
    சிங்க மராட்டியர்த ம் கொண்டு 
    சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்!  - பாரதியார் 
 

கடலோடு விளையாடு

விடிவெள்ளி நம்விளக்கு – ஐலசா
    விரிகடலே பள்ளிக்கூடம் – ஐலசா
    அடிக்கும்அலை நம்தோழன் – ஐலசா

சொல்லும் பொருளும்

  • கதிர்ச்சுடர்     - கதிரவனின் ஒளி
  • மின்னல் வரி     - மின்னல் கோடு
  • அரிச்சுவடி     - அகரவரிசை எழுத்துகள்

நெய்தல் திணை

  • நிலம்         : கடலும் கடல் சார்ந்த இடமும் 
  • மக்கள்     : பரதவர், பரத்தியர் 
  • தொழில்     : மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல் 
  • பூ         : தாழம்பூ

பொதுவான குறிப்புகள்

  • இதனை வாய்மொழி இலக்கியம் என்பர். 
  • ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு முதலான தொழில்பாடல்களும் விளையாட்டுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் முதலியனவும் நாட்டுப்புறப் பாடல்களுள் அடங்கும்.  
  • சு. சக்திவேல் நாட்டுப்புறப் பாடல்களைத்  தொகுத்து  நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலைப்  படைத்துள்ளார்.

வளரும் வணிகம்

  • பொருள்களை விற்பவரை வணிகர் என்பர்; வாங்குபவரை நுகர்வோர் என்பர். 
வணிகத்தின் வகைகள்
  • தரைவழி வணிகம், நீர்வழி வணிகம் என்பது வணிக பிரிவுகள்.
  • வண்டியில் வெளியூருக்கு குழுவாகச் செல்லுபவர்கள்  ‘வணிகச்சாத்து’எனப் பெயர் 
  • துறைமுக நகரங்கள் பட்டினம் என்றும் பாக்கம் என்றும் குறிக்கப்பட்டன.  
  • தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகமாகப் பூம்புகார் விளங்கியது.
தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து
    பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சாற்றி
    ……….
    உமணர் போகலும்  -நற்றிணை – 183
பாலொடு வந்து கூழொடு பெயரும் …… -குறுந்தொகை – 23
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் …… -அகநானூறு - 149

ஏற்றுமதி-இறக்குமதி

  •  பழங்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து தேக்கு, மயில் தோகை, அரிசி, சந்தனம், இஞ்சி, மிளகு போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன. 
  • சீனத்திலிருந்து கண்ணாடி, கற்பூரம், பட்டுப் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.
  •  அரேபியாவிலிருந்து குதிரைகள் வாங்கப்பட்டன.

வணிகத்தின் நேர்மை

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
    பிறவும் தமபோல் செயின்  -திருக்குறள் - 120
நடுவு நின்ற நன்னெஞ்சினோர்” என்று பட்டினப்பாலை
கொள்வதும் மிகை கொளாது
    கொடுப்பதும் குறைபடாது   -பட்டினப்பாலை
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
    கோடாமை சான்றோர்க்கு அணி.  - திருக்குறள்

உழைப்பே மூலதனம்

  • பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர்” என்பது ஔவையார்

சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள்

சுட்டு எழுத்துகள்

  • ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் 
  • அ, இ, உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டு எழுத்துகள் ஆகும்

அகச்சுட்டு

  • இவன், அவன், இது, அது - இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகள் பொருள் தருவதில்லை. 
  • இவ்வாறு, சுட்டு எழுத்துகள் சொல்லின் உள்ளேயே (அகத்தே) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது அகச்சுட்டு எனப்படும்.

புறச்சுட்டு

  • அவ்வானம், இம்மலை, இந்நூல்-இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும்.  
  • இவ்வாறு சுட்டு எழுத்துகள் சொல்லின் வெளியே (புறத்தே) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது புறச்சுட்டு எனப்படும்.

அண்மைச்சுட்டு

  • இவன், இவர், இது, இவை, இம்மரம், இவ்வீடு - அருகில் (அண்மையில்) உள்ளவற்றைச் சுட்டுகின்றன. 
  • எனவே, இஃது அண்மைச்சுட்டு எனப்படும். அண்மைச்சுட்டுக்குரிய எழுத்து ‘’ ஆகும்.

சேய்மைச்சுட்டு

  • அவள், அவர், அது, அவை, அவ்வீடு, அம்மரம் – தொலைவில்  (சேய்மையில்) உள்ளவற்றைச் சுட்டுகின்றன. எனவே, இது சேய்மைச்சுட்டு எனப்படும். 
  • சேய்மைச்சுட்டுக்குரிய எழுத்து ’’ ஆகும்.

(இடைச்சுட்டு)

  • அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட ‘ உ’ என்ற சுட்டெழுத்து அக்காலத்தில் பயன்பட்டுள்ளது. 
  • (எ.கா.) உது, உவன

சுட்டுத்திரிபு

  • அம்மரம், இவ்வீடு, அந்த மரம், இந்த வீடு-    அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் அந்த, இந்த எனத் திரிந்து சுட்டுப் பொருளைத் தருவது சுட்டுத்திரிபு எனப்படும்.

வினா எழுத்துகள்

  • வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள்.
  • எ, யா, ஆ, ஓ, ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும். 
  • மொழியின் முதலில் வருபவை - எ, யா (எங்கு, யாருக்கு) 
  • மொழியின் இறுதியில் வருபவை - ஆ, ஓ (பேசலாமா, தெரியுமோ) 
  • மொழி முதலிலும் இறுதியிலும் வருபவை - (ஏன், நீதானே)

அகவினா

  • வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே இருந்து வினாப் பொருளைத் தருவது அகவினா எனப்படும். 
  • எது, யார், ஏன் - என்பதில் வினா எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகளுக்குப் பொருள் இல்லை

புறவினா

  • அவனா? வருவானோ? - என்பதில் - ஆ, ஓ ஆகிய வினா எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும். 
  • இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளைத் தருவது புறவினா எனப்படும்.

கலைச்சொல் அறிவோம்

  • பண்டம்         - Commodity 
  • கடற்பயணம்         - Voyage
  • பயணப்படகுகள்     - Ferries 
  • தொழில் முனைவோர் - Entrepreneur
  • பாரம்பரியம்         - Heritage 
  • கலப்படம்         - Adulteration 
  • நுகர்வோர்         - Consumer  
  • வணிகர்         - Merchant
 

This blog has full Tamil medium history notes for koodi tholil seivom eyal-6-6th tamil notes. It was taken from previous year question papers and new samacher school books. This will help to TNPSC exams

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.