Type Here to Get Search Results !

இயல் 3 தமிழ் 8ம் வகுப்பு உடலை ஓம்புமின்eyal--3-8th-tamizh-vudalai-vompumin

இயல் 3
8ம் வகுப்பு
உடலை ஓம்புமின்

table of contents(toc)

நோயும் மருந்தும் 

  •  தீர்வனவும் தீராத் திறத்தனவும் செய்ம்மருந்தின்
    ஊர்வனவும் போலாதும் உவசமத்தின் உய்ப்பனவும்...
    ஓர்தல் தெளிவோடு ஒழுக்கம் இவையுண்டார்
    பேர்த்த பிணியுள் பிறவார் பெரிதின்பமுற்றே (பா.116) -நீலகேசி 

சொல்லும் பொருளும்


·   தீர்வன             - நீங்குபவை 

·   திறத்தன          - தன்மையுடையன

·   உவசமம்           - அடங்கி இருத்தல் 

·   கூற்றவா          - பிரிவுகளாக

·   நிழல்இகழும்   - ஒளி பொருந்திய 

·   பேர்தற்கு          - அகற்றுவதற்கு 

·   பிணி                - துன்பம்

·   ஓர்தல்               - நல்லறிவு

·   தெளிவு            - நற்காட்சி 

·   பிறவார்            - பிறக்கமாட்டார்

·   பூணாய்           - அணிகலன்களை அணிந்தவளே

·   திரியோகமருந்து - மூன்று யோக மருந்து

பொதுவான குறிப்புகள்

  • பிறவித் துன்பங்கள் தீர்க்கும் மருந்துகள்  என நீலகேசி கூறும் மூன்று- நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம்.
  • நீலகேசி ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று. 
  • இந்நூல் சமண சமயக் கருத்துகளை விளக்குகிறது. 
  • கடவுள் வாழ்த்து நீங்கலாகப் பத்துச் சருக்கங்களைக் கொண்டது (தருமவுரைச் சருக்கம் அதில் ஒன்று).
  • இது ஒரு தருக்க நூலாகும். ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை. 

 

வருமுன் காப்போம்

கவிமணி தேசிக விநாயகனார்

  • பிறப்பு: குமரி மாவட்டம்  தேரூர்
  • 36 ஆண்டுகள் ஆசிரியர் பணி
  • ஆசிய ஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை, மலரும் மாலையும் ஆகியவை நூல்கள்.
  • உமர்கயாம் பாடல்  என்பது  நூல் மொழிபெயர்ப்பு நூல்.

தமிழர் மருத்துவம்

  • சாங்கியம், ஆசீவகம் போன்றவை உடலுக்கும்  பிரபஞ்சத்துக்கும் உள்ள ஒற்றுமையைக் கூறுவனவாகும்.
  • வேர்பாரு; தழைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே என்றனர் சித்தர்கள்.

தலைக்குள் ஓர் உலகம்

  • மூளை, முதுகுத் தண்டிலிருந்து முளைக்கிறது.
  • உள்மூளை, நடுமூளை, பின்மூளை. 
  • முன்மூளையில் மூக்கு, கண் இவற்றின் முடிவுகள் உள்ளன. 
  • உடம்பில் உள்ள சிறுமூளைதான் நம் உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.
  • மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு 800 மி.லி. குருதி தேவைப்படுகிறது
  • மூளை இடப்பக்கம் = பேச, எழுத, கணக்கிட, தர்க்க ரீதியில் சிந்திங்க. 
  • வலப்பக்கம்= கவிதை எழுத, படம் வரைய, நடனம் ஆட. நடிப்பது (கலை தொடர்பானது).
  • மூளையின் வலது பகுதி செயல்பாடு அதிகம் உள்ளவர்கள் நடிகர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், இசைக்கருவிகள் கையாளுபவர்கள் ஆக இருப்பர். 
  • இடது பகுதி செயல்பாடு அதிகம் உள்ளவர் பட்டயக் கணக்கர்கள், கணக்கு ஆசிரியர்கள், இந்திய ஆட்சிப் பணிக்குப் படித்தவர்கள் போன்றோர். 

சுஜாதா

  • இயற்பெயர் ரங்கராஜன்
  • மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் உருவாக்கும் பணியில் முக்கிய பங்கு வகித்தார்
  • படைப்புகள்: என் இனிய எந்திரா, மீண்டும் ஜீனோ, ஸ்ரீரங்கத்து தேவதைகள், தூண்டில் கதைகள், தலைமைச் செயலகம் ஆகியவை.

 

எச்சம்

  • பொருள் முற்றுப்பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம்.
  • வகைகள் =பெயரெச்சம், வினையெச்சம்

பெயரெச்சம் 

  • படித்த என்ற சொல் மாணவன், மாணவி, பள்ளி, ஆண்டு போன்ற பெயர்ச்சொற்களுள் ஒன்றை கொண்டு (பெயரைக் கொண்டு) முடியும் எச்சம் பெயரெச்சம்  
  • பெயரெச்சம் மூன்று காலத்திலும் வரும்

எகா:    பாடிய பாடல்        = இறந்தகால பெயரெச்சம் 

பாடுகின்ற பாடல்     =நிகழ்காலப் பெயரெச்சம்  

பாடும் பாடல்         =எதிர்காலப் பெயரெச்சம்

தெரிநிலை, குறிப்புப் பெயரெச்சங்கள்

v  எழுதிய கடிதம்

  • இதில் எழுதிய என்பது செயல் மற்றும் இறந்தகாலத்தை காட்டுகிறது ஒரு செயலையும் காலத்தையும் வெளிப்படையாகக் காட்டும் பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம்

v  சிறிய கடிதம் 

  • இதில் சிறிய என்பது செயலையும் காலத்தையும் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டுகிறது ஒரு செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம்.

வினையெச்சம்

  • படித்து என்னும் சொல் முடித்தாள், மகிழ்ந்தார் - என  வினைச்சொல்களுள் ஒன்றை கொண்டு முடியும்
  • வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம்

தெரிநிலை , குறிப்பு வினையெச்சங்கள் 

v  எழுதி வந்தான் 

·        இதில் எழுதி என்னும் சொல் செயலையும் இறந்த காலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது ஒரு செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் 

v  மெல்ல நடந்தான் 

  • இதில் மெல்ல என்னும் சொல் காலத்தைக் காட்டாமல் பண்பினை மட்டுமே உணர்த்துகிறது ஒரு சொல் காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்துவது குறிப்பு வினையெச்சம் எனப்படும்.

முற்றெச்சம்

v  வள்ளி படித்தனள்

  • படித்தனள் என்னும் சொல் படித்தாள் வினைமுற்று பொருளைத் தருகிறது

v  வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்

  • படித்தனள் என்ற சொல் படித்து என்னும் வினையெச்ச பொருளைத் தருகிறது
  • ஒரு வினைமுற்று எச்ச பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம்.

உவமைத்தொடர்

  • பேச்சிலும் எழுத்திலும் கருத்துக்களை எளிதாகப் புரியவைக்க பயன்படும் தொடர்கள் உவமைத்தொடர்
  • ஒவ்வொரு உவமை தொடருக்கும் தனிப் பொருள் உண்டு
  • மடைதிறந்த வெள்ளம் போல் (தடையின்றி மிகுதியாக)
  • உள்ளங்கை நெல்லிக்கனி போல (வெளிப்படைத்தன்மை)

கலைச்சொல் அறிவோம்.


  • நோய்              - Disease 
  • மூலிகை       - Herbs 
  • ஒவ்வாமை    - Allergy.
  • மரபணு         - Gene
  • சிறுதானியங்கள்    - Millets 
  • பட்டயக் கணக்கர்   - Auditor 
  • பக்கவிளைவு           - Side Effect
  • நுண்ணுயிர் முறி   - Antibiotic

 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.