Type Here to Get Search Results !

இயல் 8 தமிழ் 10 வகுப்பு பெருவழி eyal-8-10th-tamil-notes-tnpsc-peruvazhi

 

இயல்

தமிழ் 10 வகுப்பு

பெருவழி

Table of contents(toc)

·    மன்னன் மக்களுக்குக் கொடை அளிப்பது பற்றிய சுவரோவியம் 17ஆம் நூற்றாண்டு சிதம்பரம்


சங்க இலக்கியத்தில் அறம் 

·    சமயக் கலப்பில்லாத மானிட அறம் இயல்பாக நிலவிய காலம் - சங்ககாலம்

·    சங்ககாலத்திற்குப் பிந்தைய அற இலக்கியங்களின் காலத்தை அறநெறிக்காலம் என்பர். 

·    அறநெறிகால அறங்கள் சமயம் சார்ந்தது

·    சங்க கால இலக்கியங்கள் இயல்பானவை 'கவிதை வாழ்க்கையின் திறனாய்வு ' என்று திறனாய்வாளர் ஆர்னால்டு கூறுகிறார்.

·    இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும் 
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்" - புறம்.  -ஆய் பற்றி ஏணிச்சேரி முடமோசியார் கூறுகிறார்

·    அறநெறி முதற்றே அரசின் கொற்றம் அறன்நெறி பிழையாத்  திறனறி மன்னர் சங்க காலத்தில் உள்ள மன்னர் ஆட்சி செய்யும் முறை பற்றிக் கூறும் பாடல்

·    குற்றங்களை அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்கிறார் -ஊன்பொதி பசுங்குடையார்.

·    நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை-  என மதுரைக் காஞ்சி கூறுகிறது.

·    செம்மை சான்ற காவிதி மாக்கள்  என்று அமைச்சர்களை மாங்குடி மருதனார் போற்றுகிறார்.

·    அறம் கூறும் அவையம் பற்றி அறம் அறக் கண்ட நெறி மான் அவையம் என்கிறது புறநானூறு

·    உறையூரில் இருந்த அற அவையம் தனி சிறப்பு பெற்றது என இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

·    மதுரையில் இருந்த அவையம் பற்றி மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது. இது  துலாக்கோல்  போல் நடுநிலை மிக்கது எனக் கூறுகிறது.

·    நம்மைவிட வலிமை குறைந்தரோடு போர் செய்யக் கூடாது என்பதனை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிடுகிறார்.
“எறியார் எறிதல் யாவணது எறிந்தார் 
எதிர்சென்று எறிதலும் செல்லான்” -புறம்

·    செல்வத்தின் பயனே ஈதல் 
துய்ப்பேம் எனினே தப்புந பலவே” - புறம். என்கிறார் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்.

·    எழுவரின் கொடைப் பெருமையைச் சிறுபாணாற்றுப்படையிலும் பெருஞ்சித்திரனார் பாடலிலும் உள்ளது

·    ஆற்றுப்படை இலக்கியங்கள் கொடை இலக்கியங்கள்.

·    பதிற்றுப்பத்து சேர அரசர்களின் கொடை பதிவாக உள்ளது

·    புறநானூற்றில் கொடை பதிவும் குறிப்பிடத்தக்கது

·    வள்ளல்கள் இல்லோர் ஒக்கல் தலைவன் பசிப்பிணி மருத்துவன் எனப் புகழப்படுகின்றனர்.

·    வழங்குவதற்கு பொருள்  உள்ளதா என்பதை பாராமல் கொடுப்பவன் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் என நக்கீரர் கூறுகிறார்.

·    வள்ளலின் பொருள் இரவலரின் பொருள், வள்ளலின் வறுமை இரவலனின் வறுமையெனப்  பெரும்பதுமனார் குறிப்பிடுகிறார்

·    உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என ஒளவையார் கூறுகிறார்.  இரவலர் வராவிட்டாலும் அவர்களைத்தேடி வரவழைத்தல் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் இயல்பு என்கிறார் நச்செள்ளையார்

·    பேகன் மறுமையை நோக்கிக் கொடுக்காதவன் என்கிறார் பரணர்

·    தன்னைத் நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது, நாட்டை இழந்ததற்கு மேல் துன்பம் தரும் எனக் கருதுபவன் குமணன் எனப் பெருந்தலை சாத்தனார் கூறுகிறார்

·    எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று மலையமான் திருமுடிக்காரியை - கபிலர் பாராட்டுகிறார்.

·    ஈயாமை இழிவு இரப்போர்க்கு ஈயாது வாழ்வதைவிட உயிரை விட்டுவிடுதல் மேல் எனக் கலித்தொகை கூறுகிறது

·    தான் பெற்றதை பிறருக்கு வழங்கும் பெருஞ்சித்திரனாரின் பேருள்ளம் புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது (புலவரின் வள்ளல் தன்மை).

·    உதவி  செய்தலைஉதவியாண்மை என்கிறார் ஈழத்து பூதன் தேவனார்.

·    பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி 
அறன் அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்  -கலித்தொகை 

·    பிறர் துன்பத்தைத் தம் துன்பம் கருதி உதவுதல் பற்றி  நல்லாந்துவனார் குறிப்பிடுகிறார்.

·    உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பது தான் என்கிறார் நல்வேட்டனார்

·    சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் 
புன்கண் அஞ்சும் பண்பின் 
மென்கண் செல்வம் செல்வம் என்பதுவேஎன -நற்றிணையில் பெருங்கடுங்கோ குறிப்பிடுகிறார்.

·    செல்வம் என்பது சிந்தையின் நிறைவு என்கிறது தமிழ் சங்க இலக்கியம்

·    நிறைவடைகிறவனே செல்வன் என்கிறது சீன நாட்டு தாவோயியம்.

·    வாய்மையை பேசும் நாவே உண்மையான நா என்ற கருத்தை "பொய்யா செந்நா" ,  "பொய்படுறியா  வயங்கு செந்நா "என இலக்கியங்கள் கூறுகிறது

·    பிழையா நன்மொழி என்று வாய்மையும் பொய்மொழி கொடுஞ் சொல் எனப் பொய்யையும் குறிப்பிடுகிறது நற்றிணை

 

குறிப்புகள்

·    போதிதர்மர் கிபி ஆறாம் நூற்றாண்டு காஞ்சி நகரின் சிற்றரசன் 

·    இவர் புத்த மதத்தைப் பரப்பச் சீனா சென்றார்.

·    இவர் பரப்பிய கொள்கையிலிருந்து உருவானதே ஜென் தத்துவம்  

·    இது ஜப்பான் முதலிய நாடுகளில் செழித்து வளர்ந்தது.


ஞானம் 

தி. சொ. வேணுகோபாலன்

·    தி. சொ . வேணுகோபாலன் இன் கவிதை தொகுப்புகள் மீட்சி விண்ணப்பம், கோடை வயல் 

·    இவர் திருவையாற்றில் பிறந்தவர் 

·    மணிபால் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசிரியராகப் பணியாற்றினார்

·    எழுத்து காலம் புது கவிஞர்களில் ஒருவர்.


காலக்கணிதம் 

கண்ணதாசன்

·    கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.

·    பிறப்பு சிவகங்கை சிறுகூடல்பட்டி சிற்றூர்.

·    பெற்றோர் சாத்தப்பன் - விசாலாட்சி 

·    கலங்காதிரு மனமே பாடல் –மூலம் 1949 ல்  திரை உலகில் அறிமுகம் 

·    சிறந்த கவியரங்கக் கவிஞராகவும் பேச்சாளராகவும் திகழ்ந்தவர் 

·    சேரமான் காதலி என்றும் புதினத்திற்காகச் சாகித்திய அகாடமி விருதுப் பெற்றவர்

·    தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டிருந்தார்.


ராமானுஜர்

·    பூரணர் - திருமந்திர உபதேசம் அளித்தது = இராமானுசர், கூரேசர், முதலியாண்டான்.(திருக்கோட்டியூர்) 

·    நாளுக்கு ஒருமுறை - செண்பகம் 

·    ஆண்டுக்கு ஒருமுறை - பிரம்மகமலம் 

·    12 ஆண்டுக்கு ஒரு முறை -குறிஞ்சி 

·    தலைமுறைக்கு ஒரு முறை -மூங்கில் அதேபோல் தலைமுறைக்கு ஒரு முறை பிறப்பவர் ஞானிகள்.

முன்தோன்றிய மூத்தக்குடி

·    கூர்வேல் குவைஇய மொய்ம்பின்
தேர்வண் பாரி தண் பறம்பு நாடே       -புறநானூறு 

·    சிவகங்கையின் பிரான்மலை பரம்புமலை பற்றிக் கூறுகிறது

பாவகை

·    எழுத்து அசை, சீர், தளை, அடி, தொடை- என ஆறு உறுப்புக்கள் கொண்டது யாப்பு.

·    வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா. வஞ்சிப்பா 

·    ஓசை - செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் என 4 வகைப்படும்

செப்பலோசை

·    வெண்பாவிற்கு உரியது. 

·    அறம் கூறும்  குறளும் நாலடியாரும் வெண்பாவில் அமைந்துள்ளன

அகவலோசை 

·    அகவல் ஓசை ஆசிரியர்பாவுக்கு உரியது. 

·    இலக்கண கட்டுக்கோப்பு குறைவாகவும் கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது அகவற்பா எனும் ஆசிரியர் பா

·    சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம் மணிமேகலை பெருங்கதை ஆகிய காவியங்களும் அகவற்பாவில் அமைந்தவை

துள்ளலோசை 

·    செய்யுளின் இடையிடையே உயர்ந்து   வருவது துள்ளலோசை 

·    இது  கலிப்பாவுக்கு உரியது

தூங்கலோசை 

·    வஞ்சிப்பாவுக்கு  உரியது

பா வகைகள் 

·    குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா என ஐந்து வெண்பாக்கள் உள்ளன

·    நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா என நான்கு வகை ஆசிரியர் பாக்கள் உள்ளன

 

பொது இலக்கணம்

வெண்பா

ஆசிரியப்பா அகவற்பா

ஓசை

செப்பலோசை பெற்று வரும்

அகவலோசை பெற்று வரும்

சீர்

ஈற்றடி முச்சீர் ஆகவும் ஏனைய அடிகள் நாற்சீராகவும் வரும் இயற்சீர், வெண்சீர் மட்டுமே பயின்று வரும்

ஈரசைச்சீர் மிகுதியாகவும் காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும்

தளை

இயற்சீர் வெண்டளைவெண்சீர் வெண்டளை மட்டுமே பயின்று வரும்

ஆசிரியத்தளை  மிகுதியாகவும், வெண்டளை, கலித்தளை ஆகியவை விரவியும் வரும்

அடி

2 அடி முதல் 12 அடி வரை அமையும் (கலிவெண்பா பதிமூன்று அடிக்குமேல் வரும்)

3 அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமையும்

முடிப்பு

ஈற்றுச்சீர் - நாள், மலர்காசு, பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடியும்

ஏகாரத்தில் முடித்தல் சிறப்பு

குறள் வெண்பா 

·    வெண்பாவின் பொது இலக்கணம் அமையப் பெற்று இரண்டு அடிகளாக வரும் 

·    முதலடியில் நான்கு சீராகவும் அளவடி 

·    இரண்டாம் அடி மூன்று சீராகவும் சிந்தடி வரும்

யாப்போசை தரும் பாவோசை

·    செப்பலோசை இருவர் உரையாடுவது போன்ற ஓசை

·    அகவலோசை ஒருவர் பேசுதல் போன்ற சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை

·    துள்ளலோசை  கன்று துள்ளினாற்போலச் சீர்தோறும் துள்ளி  வரும் ஓசைஅதாவது தாழ்ந்து உயர்ந்து  வருவது

·    தூங்கலோசை  சீல் தோறும் துள்ளாது தூங்கிவரும் ஓசை தாழ்ந்தே  வருவது -யாப்பதிகாரம் புலவர் குழந்தை 

உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும் 

கல்லார் அறிவிலா தார்

·    உல/கத்/தோ      = நிரை நேர் நேர்        = புளிமாங்காய்

·    டொட்/ட              = நேர் நேர்                  = தேமா

·    வொழு/கல்        = நிரை  நேர்               = புளிமா

·    பல/கற்/றும்      =நிரை நேர் நேர்         =புளிமாங்காய்

·    கல் / லார்           =நேர் நேர்                   = தேமா

·    அறி/விலா         =நிரை  நிரை             = கருவிளம்

·    தார்                      = நேர்                           = நாள்

·    மரம் தேடிய களைப்பு 
மின்கம்பியில் 
இளைப்பாறும் குருவி            -நாணற்காடன்

·    விற்பனையில் 
காற்று பொட்டலம் 
சிக்கனமாய் மூச்சு விடவும்    -புதுவைத் தமிழ்நெஞ்சன்

 

·    கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகை கிடைத்த 
குளிர் தருவே தரு நிழலே நிழல் கனிந்த கனியே……
…. ஆடையிலே எனை மணந்த மணவாளா பொதுவில் 
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல் அணிந்த அருளே           -வள்ளலார்

கலைச்சொற்கள் அறிவோம்

·    Belief                    -நம்பிக்கை 

·    Renaissance          -மறுமலர்ச்சி 

·    Philosopher           -மெய்யியலாளர் 

·    Revivalism             -மீட்டுருவாக்கம்

நூல்களும் ஆசிரியர்களும் 

·    அறமும் அரசியலும்     - மு வரதராசன் 

·    அபி கதைகள்                - அபி 

·    எண்ணங்கள்                -எம் எஸ் உதயமூர்த்தி

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.