Type Here to Get Search Results !

இயல்-6-தமிழ்-7-ம்-வகுப்பு-கலை-வண்ணம்- eyal-6-7th-tamil-kalaivannam

இயல் 6-தமிழ்-7 ம் வகுப்பு

கலை வண்ணம்

table of contents(toc)

ஒரு வேண்டுகோள்.

சொல்லும் பொருளும்

  • பிரும்மாக்கள்    – படைப்பாளர்கள் 
  • வனப்பு     – அழகு
  • நெடி         – நாற்றம் 
  • பூரிப்பு         – மகிழ்ச்சி
  • மழலை     – குழந்தை 
  • மேனி         – உடல்

நூல் வெளி

  • தேனரசன் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். 
  • இவர் வானம்பாடி, குயில், தென்றல் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார். 
  • இவரது கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்படும். 
  • மண்வாசல், வெள்ளை ரோஜா, பெய்து பழகிய மேகம் ஆகிய கவிதையும் பெய்து பழகிய மேகம்   நூலையும் எழுதியுள்ளார்.

 கீரைப்பாத்தியும் குதிரையும்(இரட்டுற மொழிதல்)

  • ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும்படி பாடப்படுவதில் இரட்டுறமொழிதலும் ஒன்று. இதனைச் ‘சிலேடை’ என்றும் கூறுவர்.
  • கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால்
    வெட்டி மறிக்கின்ற மேன்மையால் - முட்டப்போய்
    மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன்
    ஏறப் பரியாகு மே* - காளமேகப் புலவர்

சொல்லும் பொருளும்

  • வண்கீரை   - வளமான கீரை 
  • பரி               - குதிரை
  • முட்டப்போய் - முழுதாகச் சென்று 
  • கால்             - வாய்க்கால், குதிரையின் கால்
  • மறித்தல்     - தடுத்தல் (மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்தி கட்டுதல்), எதிரிகளைத் தடுத்துத் தாக்குதல்

நூல் வெளி

  • காளமேகப்புலவரின் இயற்பெயர் வரதன். 
  • மேகம் மழை பொழிவது போலக்கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் காளமேகப்புலவர் என்று அழைக்கப்பட்டார். 
  • திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம். சித்திர மடல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
  • இவரது தனிப்பாடல்கள் - தனிப்பாடல் திரட்டு என்னும் நூலிலும் இடம் பெற்றுள்ளன.

 பேசும் ஓவியங்கள்

  • சுவர்களிலும் மேற்கூரைகளிலும் வரையும் ஓவியத்தின் எடுத்துக் காட்டு சித்தன்ன வாசல்
  • ஓவியம் வரையப் பயன்படும் துணியை எழினி, திரைச்சீலை, கிழி, படாம் என்பன பலப் பெயர்கள்
  • சீவகசிந்தாமணிக் காப்பியத்தில் குணமாலை (தலைவி) யானையைக் கண்டு அஞ்சிய காட்சியைச் சீவகன் துணியில் வரைந்ததாகக் கூறப்பட்டுள்ளது. 
  • துணி ஓவியம்-கலம்காரி ஓவியங்கள் என்னும் பெயரில் தமிழகத்திலும்  ந்திராவிலும் ஓவியர்கள் வரைந்து வருகின்றனர்
  • புனையா ஓவியம் கடுப்பப் புனைவில் - நெடுநல்வாடை
  • புனையா ஓவியம் புறம் போந்தன்ன -மணிமேகலை 
  • ஓலைச்சுவடிகள் - தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் உள்ளது.
  • ஓவிய மண்டபத்தில் பல வகை ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன என்ற செய்தி பரிபாடலில் இடம் பெற்றுள்ளது. 
  • இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் 
    துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும்  - பரிபாடல் (19 : 54-55)

தந்த ஓவியம் : 

  • யானையின் தந்ததில் ஓவியம் தீட்டினர்.கேரள மாநிலத்தில் அதிகமாகக் காணமுடியும்

கண்ணாடி ஓவியம் : 

  • கண்ணாடியில் வரையும் ஓவியர்கள் தஞ்சாவூரில் மிகுதியாக உள்ளனர். 

கருத்துப்பட ஓவியம்: 

  • இந்தியா- இதழில் பாரதியார் தான் முதன்முதலில் பயன்படுத்தினார்

ஓவியம் 

  • ஓவு, ஓவியம், ஓவம், சித்திரம், படம், படாம் , வட்டிகைச்செய்தி.
  • ஓவியம் வரைபவர் 
  • கண்ணுள் வினைஞர், ஓவியப் புலவர், ஓவமாக்கள், கிளவி வல்லோன், சித்திரக்காரர், வித்தகர்.

ஓவியக் கூடம் 

  • எழுதெழில் அம்பலம், எழுத்துநிலை மண்டபம், சித்திர அம்பலம், சித்திரக்கூடம், சித்திரமாடம், சித்திரமண்டபம், சித்திர சபை
  • ஐரோப்பியக் கலை நுணுக்கத்துடன் இந்தியக் கதை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளைப் புகுத்தியவர் இராஜா இரவிவர்மா. 
  • இவரது ஓவியமுறைகள் நாட்காட்டிகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டன. 
  • நாட்காட்டி ஓவியம்  வரையும் முறையின் முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர் கொண்டையராஜு . 
  • நாட்காட்டி ஓவியங்களைப் பசார் பெயிண்டிங் என்றும் அழைப்பர்.

தமிழ் ஒளிர் இடங்கள் 

தஞ்சை சரசுவதி மகால் நூலகம்

  • இந்தியாவில் உள்ள தொன்மையான நூலகம் தஞ்சை சரசுவதி மகால் . 
  • இந்நூலகம் கி.பி. (பொ.ஆ.) 1122 முதல் இயங்கி வருகிறது. 
  • இங்குத் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் ஓலைச் சுவடிகளும் கையெழுத்துப் படிகளும் உள்ளன. 
  • தலைசிறந்த ஓவியங்களும் தொன்மையான இசைக் கருவிகளும் சிற்பங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன.

 தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர்.

  • தமிழக அரசால் கி.பி. (பொ.ஆ.) 1981 இல் தஞ்சாவூரில் தோற்றுவிக்கப்பட்டது தமிழ்ப்பல்கலைக்கழகம்.
  • இங்குக் கலைப்புலம், சுவடிப்புலம், வளர்தமிழ்ப்புலம், மொழிப்புலம், அறிவியல்புலம் ஆகிய ஐந்து புலங்களும் 25 துறைகளும் உள்ளன. 

 உ.வே.சா நூலகம் – சென்னை

  • கி.பி. (பொ.ஆ.) 1942 இல் தொடங்கப்பட்ட இந்நூலகத்தில் தமிழ், தெலுங்கு, வடமொழி உள்ளிட்ட பல்வேறு மொழி நூல்கள் உள்ளன. 
  • இங்கு 2128 ஓலைச்சுவடிகளும் 2941 தமிழ் நூல்களும் உள்ளன.

 கீழ்த்திசை நூலகம் – சென்னை

  • இந்நூலகம் கி.பி. (பொ.ஆ.) 1869ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 
  • இங்குத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் ஓலைச்சுவடிகள் உள்ளன. 
  • கணிதம், வானியல், மருத்துவம், வரலாறு உள்ளிட்ட பல்வேறு துறை நூல்களும் இடம்பெற்றுள்ளன. 
  • இது தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாம் தளத்தில் இயங்கி வருகின்றது.

 கன்னிமாரா நூலகம் – சென்னை

  • கி.பி.(பொ. ஆ.) 1896 இல் தொடங்கப்பட்ட கன்னிமாரா நூலகம் தமிழ்நாட்டின் மையநூலகம் ஆகும். 
  • இஃது இந்திய நாட்டின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. 
  • ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. 
  • இந்தியாவில் வெளியிடப்படும் புத்தகங்கள், நாளிதழ்கள், பருவ இதழ்கள் ஆகியவற்றின் ஒரு படி (பிரதி) இங்குப் பாதுகாக்கப்படுகிறது. 
  • இந்நூலகத்தின் மூன்றாம் தளத்தில் மறைமலை அடிகள் நூலகமும்  செயல்பட்டு வருகின்றது.

 வள்ளுவர் கோட்டம் - சென்னை

  • திருவள்ளுவரின் புகழை உலகறியச் செய்யச் சென்னைக் கோடம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் என்னும் கலைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. 
  • 1973 இல் தொடங்கி 1976 இல் முடிக்கப்பட்டன.
  • 25 அடி நீளமும், 25 அடி அகலமும் உடையது. 
  • தேரின் மொத்த உயரம் 128 அடி. இரண்டு பக்கங்களிலும் பக்கத்திற்கு நான்கு சக்கரங்கள் தனிக்கற்களால் ஆனது.
  • வள்ளுவர் கோட்டத்தில் 1330 குறட்பாக்களும் செதுக்கப்பட்டுள்ளன. 
  • அறத்துப்பால் - கருநிறப் பளிங்குக்கல்
  • பொருட்பால் -வெண்ணிறப் பளிங்குக் கல்
  • இன்பத்துப்பால் - செந்நிறப் பளிங்குக் கல் அழகாகப் பொறிக்கப்பட்டுள்ளன.

 திருவள்ளுவர் சிலை - கன்னியாகுமரி

  • இந்தியாவின் தெற்கு எல்லையாகிய கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் சிலை தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது.
  • 1990ஆம் ஆண்டு தொடங்கி பொதுமக்கள் பார்வைக்காக 01.01.2000, அன்று திறந்துவைக்கப்பட்டது. 
  • அறத்துப்பாலின் அதிகாரங்களை உணர்த்துவது போல் பீடம் 38 அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. 
  • பொருட்பால், இன்பத்துப்பால் ஆகியவற்றின் மொத்த அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் சிலை 95 அடி உயரம்  உடையதாக அமைக்கப்பட்டுள்ளது. 
  • 3681 கருங்கற்கள் கொண்டு கட்டப்பட்டது
  • சிலை = 7000 டன் எடை கொண்டது.

 உலகத் தமிழ்ச் சங்கம் - மதுரை

  • மதுரை ( தல்லாகுளம்) காந்தி அருங்காட்சியகம் அருகில் உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டுள்ளது. 
  • 80,000 சதுர அடி பரப்பளவு கொண்டது.
  • 1981-ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் அறிவிக்கப்பட்டபடி 2016ல் திறந்துவைக்கப்பட்டது.
  • தருமிக்குப் பாண்டிய மன்னன் பொற்கிழி வழங்கிய திருவிளையாடல் புராணக் காட்சி இதன் நுழைவாயிலில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. 
  • தொல்காப்பியர், ஒளவையார், கபிலர் ஆகியோரின் முழுஉருவ வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. 

 சிற்பக் கலைக்கூடம் - பூம்புகார்

  • சோழர்களின் தலைநகரமாகவும் துறைமுக நகரமாகவும் விளங்கியது பூம்புகார்.
  • மருவூர்ப்பாக்கம் என்னும் கடல் பகுதியும் பட்டினப்பாக்கம் என்னும் நகரப் பகுதியும் அமைந்திருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
  • 1973 - பூம்புகார் கடற்கரையில் சிற்பக் கலைக்கூடம் நிறுவப்பட்டது. 
  • இக்கூடம் ஏழுநிலை மாடங்களைக் கொண்டது. கண்ணகியின் வரலாற்றை விளக்கும் 119 சிற்பத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. மாதவிக்கும் ஒரு சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது. 
  • கலைக்கூடத்திற்கு அருகில் இலஞ்சிமன்றம், பாவைமன்றம், நெடுங்கல்மன்றம் உள்ளது.

 தொழிற்பெயர்

  • ஒரு செயலின் அல்லது வினையின் பெயராக அமைவது தொழிற்பெயர் எனப்படும். 
  • தொழிற்பெயர் எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் காட்டாது. 
  • படர்க்கை இடத்தில் மட்டும் வரும். 
  • தொழிற்பெயரை விகுதி பெற்ற தொழிற்பெயர், முதனிலைத் தொழிற்பெயர், முதனிலை திரிந்த தொழிற்பெயர் எனப் பிரிப்பர் 

விகுதி பெற்ற தொழிற்பெயர்

  • நடத்தல், உண்ணல், வாழ்வு, வாழ்க்கை ஆகிய பெயர்களில். நட, உண், வாழ் ஆகிய வினைப்பகுதிகள் தல், அல், வு, கை ஆகிய விகுதிகளோடு சேர்ந்து தொழிற்பெயர்களாக அமைகின்றன.
  • வினைப்பகுதியுடன் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து வருவது விகுதி பெற்ற தொழிற்பெயராகும்.
  • தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, வு, தி, சி, வி, மை -போன்றவை தொழிற்பெயர் விகுதிகளாக வரும். 

(எ.கா.)

  • தருதல்        - தல்            நட்பு            - பு
  • கூறல்           - அல்           மறைவு       - வு
  • ஆட்டம்        – அம்            மறதி            - தி
  • விலை         – ஐ.              உணர்ச்சி    - சி
  • வருகை       - கை           கல்வி          - வி
  • பார்வை       - வை.          செய்யாமை - மை
  • போக்கு        - கு.

முதனிலைத் தொழிற்பெயர்.

  • வானில் இடி இடித்தது.    சோறு கொதி வந்தது.
  • இடி, கொதி என்னும் சொற்கள் இடித்தல், கொதித்தல் என்னும் சொற்களின் பகுதிகளாகும். 
  • இவ்வாறு ஏவல் ஒருமை வினையாக அமையும் வினைச்சொற்களின் பகுதியை முதனிலை என்பர். 
  • முதனிலை எவ்வகை மாற்றமும் பெறாமல் தொழிற்பெயராக அமைவது முதனிலைத் தொழிற்பெயர் எனப்படும்.

முதனிலை திரிந்த தொழிற்பெயர்

  • தமிழ் படிக்கும் பேறு பெற்றேன்.உணவின் சூடு குறையவில்லை.
  • பேறு, சூடு ஆகிய சொற்கள் பெறு, சுடு என்னும் பகுதிகளின் முதலெழுத்து நீண்டு, பேறு, சூடு எனத் திரிந்து தொழிற்பெயர்களாக மாறி உள்ளன. 
  • முதனிலை திரிவதால் உருவாகும் தொழிற்பெயர் முதனிலை திரிந்த தொழிற்பெயர் எனப்படும். 
  • (எ.கா.) விடு- வீடு, மின்- மீன், கொள்- கோள், உடன்படு- உடன்பாடு

கலைச்சொல் அறிவோம்.

  • படைப்பாளர்         – Creator                 அழகியல்               – Aesthetics       
  • சிற்பம்                    – Sculpture               தூரிகை                – Brush
  • கலைஞர்              – Artist                    கருத்துப்படம்        – Cartoon
  • கல்வெட்டு             – Inscriptions            குகை ஓவியங்கள் – Cave paintings
  • கையெழுத்துப்படி – Manuscripts         நவீன ஓவியம்      - Modern Art

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.