Type Here to Get Search Results !

eyal-9-7th-tamil-maanudam vellum-இயல் 9- 7ம் வகுப்பு மானுடம் வெல்லும்

இயல் 9- 7ம் வகுப்பு 

table of contents(toc)

மானுடம் வெல்லும்

மலைப் பொழிவு

  • இவை இல்லாது அமைதிகள் செய்தால்
    இதயம் மலையளவு   - கண்ணதாசன்.

சொல்லும் பொருளும்

  • சாந்தம்     – அமைதி 
  • தாரணி     – உலகம்
  • மகத்துவம்     – சிறப்பு 
  • தத்துவம்     – உண்மை 
  • பேதங்கள்     – வேறுபாடுகள் 
  • இரக்கம்     – கருணை

பொதுவான குறிப்புகள் 

  • கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா . 
  • கவியரசு என்பது  சிறப்புப் பெயர்.
  • இவர் தமிழக அரசவைக் கவிஞராகவும் இருந்துள்ளார். 
  • இப்பாடல் இயேசுகாவியம் நூலில் (மலைப்பொழிவு) பகுதி.

தன்னை அறிதல்

  • சே. பிருந்தா பெண்கவிஞர்களுள் ஒருவர். 
  • மழை பற்றிய பகிர்தல்கள்,வீடு முழுக்க வானம், மகளுக்குச் சொன்ன கதை ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார். 

கண்ணியமிகு தலைவர்

  • கண்ணியமிகு காயிதே மில்லத். 
  • திருச்சி  தூயவளனார் கல்லூரியில் பயின்றார்.
  • இயற்பெயர் முகம்மது  இசுமாயில். 
  • மக்கள் அவரை அன்போடு காயிதே மில்லத் என்று அழைத்தனர். 
  • ‘காயிதே மில்லத்’ என்னும் அரபுச் சொல்லுக்குச் சமுதாய வழிகாட்டி என்று பொருள். 
  • அப்பெயருக்கேற்ப மக்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.
  • திருச்சியில்  ஜமால் முகம்மது கல்லூரி, கேரளாவில் ஃபரூக் கல்லூரி ஆகியவற்றைத் தொடங்க காரணமானவர் - காயிதே மில்லத்

அரசியல் பொறுப்புகள்

  • காயிதே மில்லத் 1946 முதல் 1952 வரை, சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் . 
  • இந்திய அரசியலமைப்பு உருவாக்கக் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். 
  • இந்தியா விடுதலைக்கு பின் மாநிலங்களவை  மற்றும்  மக்களவை உறுப்பினராக இருந்தார். 

பயணம்

  • பாவண்ணன் கவிதை மற்றும் கட்டுரைகள் எழுதுவார்.
  • கன்னட மொழியிலிருந்து பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
  • படைப்புகள் : வேர்கள் தொலைவில் இருக்கின்றன, நேற்று வாழ்ந்தவர்கள், கடலோர வீடு, பாய்மரக்கப்பல், மீசைக்கார பூனை, பிரயாணம் .

ஆகுபெயர்

  • வெள்ளைப்பசு -வெள்ளை என்னும் சொல் வெண்மை என்னும் நிறப் பொருளைத் தருகிறது. இஃது இயல்பான பெயர்ச்சொல்.
  • வீட்டுக்கு வெள்ளை அடித்தான். -வெள்ளை என்பது வெண்மை நிறத்தைக் குறிக்காமல் வெண்மை நிறமுடைய சுண்ணாம்பைக் குறிக்கிறது. 
  • இவ்வாறு ஒன்றன் பெயர் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும்.
  • பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் ஆகிய ஆறு வகையான பெயர்ச்சொற்களிலும் ஆகுபெயர்கள் உண்டு

பொருளாகுபெயர்

  • மல்லிகை சூடினாள். 
  • மல்லிகை என்பது செடியைக் குறிக்காமல் உறுப்பாகிய மலரைக் குறிக்கிறது.
  • இவ்வாறு பொருளின் பெயர் அதன் சினையாகிய உறுப்புக்கு ஆகிவருவது பொருளாகுபெயர் எனப்படும். 
  • இதனை முதலாகு பெயர் எனவும் கூறுவர்.

இடவாகுபெயர்

  • சடுகுடு போட்டியில் தமிழ்நாடு வெற்றி பெற்றது. 
  • தமிழ்நாடு என்னும் பெயர் அவ்விடத்தைச் சேர்ந்த விளையாட்டு அணியைக் குறிப்பதால் இடவாகுபெயர் ஆகும்.

காலவாகுபெயர்

  • திசம்பர் சூடினாள் -திசம்பர் என்பது காலப்பெயர் அக்காலத்தில் மலரும் பூவைக் குறிப்பதால் இது காலவாகுபெயர் ஆயிற்று.

சினையாகுபெயர்

  • தலைக்கு ஒரு பழம் கொடு -ஆளுக்கு ஒரு பழம் கொடு என்பது பொருளாகும். 
  • இவ்வாறு சினையின் (உறுப்பின்) பெயர் முதலாகிய பொருளுக்கு ஆகிவருவது சினையாகுபெயர் எனப்படும்.

பண்பாகுபெயர்

  • இனிப்பு தின்றான். -இனிப்பு என்னும் பண்புப் பெயர் தின்பண்டத்தைக் குறிப்பதால் இது பண்பாகுபெயர் ஆயிற்று.

தொழிலாகுபெயர்

  • பொங்கல் உண்டான். இத்தொடரில் பொங்கல் (பொங்குதல்) என்னும் தொழிற்பெயர் அத்தொழிலால் உருவான உணவினைக் குறிப்பதால் இது தொழிலாகுபெயர்.

இரட்டைக்கிளவி

  • விறுவிறு, கலகல, மளமள – என இரட்டையாக இணைந்து வந்து பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்களை இரட்டைக்கிளவி என்பர்.
  • இரட்டைக்கிளவி வினைக்கு அடைமொழியாகக் குறிப்புப் பொருளில் வரும்.

அடுக்குத்தொடர்

  • அச்சம், விரைவு, சினம் போன்ற காரணங்களால் ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தொடர்ந்து வருவதை அடுக்குத்தொடர் என்பர். 
  • அடுக்குத் தொடரில் பலமுறை இடம்பெறும் ஒவ்வொரு சொல்லும் பொருளுடையது.
  • அடுக்குத் தொடர் = விரைவு, வெகுளி, உவகை, அச்சம், அவலம் ஆகிய பொருள்களின் காரணமாக வரும். 

கலைச்சொல் அறிவோம்.

  • சமயம்  - Religion     
  • தத்துவம்    - Philosophy    
  • எளிமை    -Simplicity     
  • நேர்மை    - Integrity
  • ஈகை          - Charity 
  • வாய்மை    -Sincerity    
  • கண்ணியம் - Dignity    
  • உபதேசம்    - Preaching         
  • கொள்கை    -  Doctrine     
  • வானியல்    - Astronomy



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.