Type Here to Get Search Results !

இயல் 8 8ம் வகுப்பு அறத்தால் வருவதே இன்பம் eyal-8-8th-tamil-notes-arathaal-varuvathey-enpam

இயல் 8
8ம் வகுப்பு
அறத்தால் வருவதே இன்பம்
table of contents(toc)

ஒன்றே குலம்

  • ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
    நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
    சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
    நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்ம்மினே
  • படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
    நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
    நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
    படமாடக் கோயில் பகவற்குஅது ஆமே *- திருமூலர்

சொல்லும் பொருளும்

  • நமன்         – எமன்
  • நாணாமே     – கூசாமல்
  • சித்தம்     – உள்ளம் 
  • உய்ம்மின்     – ஈடேறுங்கள்
  • நம்பர்         – அடியார் 
  • ஈயில்         - வழங்கினால்
  • படமாடக்கோயில் – படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயில்.

பொதுவானக் குறிப்புகள்

  • 63 நாயன்மார்களுள் ஒருவர், 18 சித்தர்களுள் ஒருவர் = திருமூலர். 
  • இவர் இயற்றிய திருமந்திரம் மூவாயிரம் பாடல்கள்  கொண்டது. 
  • எனவே, இந்நூல் தமிழ் மூவாயிரம் என்பர். 
  • இது பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக உள்ளது.

மெய்ஞ்ஞான ஒளி

  • அடக்கத் தாம்மாய ஐம்பொறியைக் கட்டிப்
    படிக்கப் படிப்பு எனக்குப் பகராய் பராபரமே! - குணங்குடி மஸ்தான் சாகிபு

சொல்லும் பொருளும்

  • பகராய் - தருவாய்
  • பராபரம் – மேலான பொருள் 
  • ஆனந்த வெள்ளம் – இன்பப்பெருக்கு
  • அறுத்தவருக்கு – நீக்கியவர்க்கு 

குணங்குடி மஸ்தான்

  • சாகிபுவின் இயற்பெயர் சுல்தென் அப்துல் காதர்
  • இவர் இளம் வயதிலேயே துறவரம் பூண்டார்
  • சதுரகிரி, புறா மலை, நாகமலை முதலிய பகுதிகளில் தவம் இயற்றி ஞானம் பெற்றார். 
  • எக்காளக் கண்ணி, மனோன்மணிக்கண்ணி, நந்தீசுரம் கண்ணி முதலியன  இவரின் நூல்கள். 
  • குணங்குடியார் பாடற்கோவை இவரின் பாடல் தொகுப்பு நூலாகும்.

அயோத்திதாசர் சிந்தனைகள்

  • தந்தை பெரியாருக்கும் அண்ணல் அம்பேத்கருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவர் அயோத்திதாசர். 
  • இவர் தென்னிந்தியச் சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றுவர்.
  • அயோத்திதாசர் 20.05. 1845   நாள் சென்னையில் பிறந்தார். 
  • இயற்பெயர் காத்தவராயன்
  • இவரின் ஆசிரியர் - அயோத்திதாச பண்டிதர். இவரின் மீது காட்டிய அன்பின் காரணமாகத் தம் பெயரை மாற்றினார்.
  • திருமணத்திற்கு முன்பாக நீலகிரியிலும் பின்னர் பர்மாவுக்கு சென்று தமிழகம் திருப்பி வந்தார்.
  • அயோத்திதாசர் தமிழ் மட்டுமின்றி பாலி, வடமொழி, ஆங்கிலம்  ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருந்தார்
  • சென்னையில் (1907) ஒரு பைசா தமிழன் என்ற வார இதழைத் காலணா விலையில் தொடங்கினார். ஒரு ஆண்டிற்கு பின் அவ்விதழின் பெயர் தமிழன் என மாற்றினார்.
  • தமிழன் இதழ் சென்ற பகுதிகள் மற்றும் நாடுகள்: மைசூர், கோலார், ஹைதராபாத்,   இரங்கூன், மலேசியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா.

அயோத்திதாசர் பதிப்பித்த நூல்கள்

  • போகர் எழுநூறு 
  • அகத்தியர் இருநூறு 
  • சிமிட்டு இரத்திரன சுருக்கம்
  • பாலவாகடம்.
  • எனது பகுத்தறிவு பிரச்சாரத்துக்கும் சீர்திருத்தச் கருத்துக்களுக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசர், தங்கவயல் அப்பாதுரையெனத் தந்தை பெரியார் கூறுகிறார்.

அயோத்திதாசரின் நூல்கள்

  • புத்தரது ஆதிவேதம் 
  • இந்திரர் தேச சரித்திரம் 
  • விவாக விளக்கம் 
  • புத்தர் சரித்திரப்பா முதலியன 
  • திருவள்ளுவர் ஒளவையார் ஆகியோரின் படைப்புகளுக்குப் பௌத்த கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கம் எழுதினார்.
  • சென்னை தாம்பரம் சித்த ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த  மருத்துவமனைக்கு அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனையென பெயர் சூட்டப்பட்டுள்ளது.

திராவிட மகாஜன சங்கம் 1892 

  • சாலைகள் அமைத்தல்
  • கால்வாய்கள் பராமரித்தல் 
  • குடிகளின் பாதுகாப்புக்கு காவல்துறையினரை நியமித்தல் 
  • பொது மருத்துவமனை அமைத்தல் 
  • சிற்றூர்கள்தோறும் கல்விக்கூடங்கள் ஏற்படுத்த போராடினர்.

மனித யந்திரம்

  • மாகாணி, வீசம் போன்றவை அக்கால வழக்கிலிருந்த அளவைப் பெயர்கள்
  • அணா, சல்லி, துட்டு அக்கால நாணய பெயர்கள்.16 அணா = 1 ரூபாய்.
  • சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் இயற்பெயர்  சொ .விருதாச்சலம்
  • கடவுளும் கந்தசாமி பிள்ளையும், சாபவிமோசனம், பென்னாகரம், ஒரு நாள் கழித்து போன்றவை இவரது சிறுகதைகளுள் புகழ்பெற்றவை 
  • மணிக்கொடி இதழில் வெளியான சிறுகதை -மனித எந்திரம்

யாப்பு இலக்கணம்

  • குறிப்பிட்ட வடிவத்தில் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதப்படும் கவிதை மரபுக்கவிதை.
  • இலக்கண கட்டுப்பாடுகளின்றி கருத்துக்கு மட்டும் முதன்மை கொடுத்து எழுதப்படும் கவிதை புதுக்கவிதை
  • மரபுக் கவிதை எழுதுவதற்கான இலக்கணம் யாப்பு இலக்கணம் எனப்படும்.
  • யாப்பு இலக்கணத்தின் படி  செய்யுளுக்குரிய உறுப்புகள் ஆறு: எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை.

எழுத்து 

எழுத்துக்களை மூன்று வகையாகப் பிரிப்பர் 

  • குறில் =உயிர் குறில், உயிர் மெய் குறில் 
  • நெடில்= உயிர் நெடில், உயிர் மெய் நெடில் 
  • ஒற்று =மெய் ஒற்று. ஆய்த எழுத்து.

அசை

  • எழுத்து ஒன்றோ சிலவோ சேர்ந்து வருவது அசை.
  • நேரசை, நிரையசை- என இருவகைப்படும்
  • குறில் அல்லது நெடில் எழுத்து தனித்து வந்தாலும் ஒற்றுடன் சேர்ந்து வந்தாலும் நேரசை= நம், நா, நாம். ந.
  • இரண்டு குறில் எழுத்துக்கள் அல்லது குறில் நெடில் எழுத்துக்கள் இணைந்து வந்தாலும் அவற்றுடன்  ஒற்று சேர்த்து வந்தாலும் நிரையசையாகும். கட, கடல், கடா, கடாம்

சீர் 

  • ஓர் அசையோ ஒன்றுக்கும் மேற்பட்ட அசைகள் சேர்ந்து வருவது சீர் 
  • சீர்களை ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர் என வகைப்படுத்துவர்.

தளை 

  • சீர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவதை தளை என்பர்.
  • முதல் சீரின் இறுதியிலும் வரும் சீரின் முதலிலும் உள்ள அசைகள் எவ்வகை அசைகள் என்பதன் அடிப்படையில்  தளைகள் ஏழு வகைப்படும் 

அடி 

  • இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டு அமைவது அடி 
  • அடி ஐந்து வகைப்படும்

தொடை 

  • செய்யுளில் ஓசை இன்பமும் பொருள் இன்பம் தோன்றும் வகையில் சீர்களுக்கு இடையிலோ அடிகளுக்கு இடையிலோ அமையும் ஒற்றுமையே தொடை ஆகும்.
  • முதலெழுத்து ஒன்றி வருவது மோனை. 
  • இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை
  • இறுதி எழுத்து அல்லது இறுதி ஓசை ஒன்றி வருவது இயைபு.
  • ஒரு பாடலின் இறுதிச் சீர் அல்லது அடியின் இறுதிப்பகுதி அடுத்த பாடலின் முதல் சீர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடப்படுவது அந்தாதித் தொடை.

பா வகைகள்

  • நான்கு வகைப்படும். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா மற்றும் வஞ்சிப்பா
  • வெண்பா     =செப்பலோசை உடையது. அறநூல்கள் வெண்பாவால் அமைந்தவை.
  • ஆசிரியப்பா     =அகவல் ஓசை உடையது. சங்க இலக்கியங்கள் இதனால் அமைந்தவை 
  • கலிப்பா     =துள்ளல் ஓசை உடையது. கலித்தொகை கலிப்பாவால் ஆனது 
  • வஞ்சிப்பா      = தூங்கல் ஓசை உடையது.

கலைச்சொற்கள் 

  • தொண்டு     - Charity 
  • நேர்மை     - Integrity
  • ஞானி         - Saint 
  • பகுத்தறிவு     - Rational
  • தத்துவம்     - Philosophy 
  • சீர்திருத்தம்     - Reform .

திருக்குறள்

  • கான முயலெய்த அம்பினில் யானை 
    பிழைத்தவேல் ஏந்தல் இனிது - அணி:பிறிது மொழிதல் அணி
  • நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் 
    பண்புடை யாளர் தொடர்பு  - அணி : உவமை அணி
  • பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் 
    கலம் தீமை யால்திரிந் தற்று.- அணி : உவமை அணி


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.