Type Here to Get Search Results !

இயல் 7 தமிழ் 9ம் வகுப்பு வாழிய நிலனே EYAL-7-9TH-TAMIZH-NOTES-VAZHIYA-NILANE

இயல் 7
தமிழ் 9ம் வகுப்பு
வாழிய நிலனே

Table of contents(toc)


இந்திய தேசிய ராணுவத்தில் தமிழர் பங்கு

-மா . சு. அண்ணாமலை

  • பிப்ரவரி 1942 - 15 இரண்டாம் உலகப்போர் ஆங்கிலேய படை, மலேசியாவில் ஜப்பானிடம் சரண் அடைந்தது.
  • இப்படையில் இருந்த இந்திய வீரர்களைக் கொண்டு ஜப்பானியர்கள்- மோகன் சிங் என்பவர் தலைமையில் இந்திய தேசிய ராணுவம்  (ஐ என் ஏ) என்ற படையை உருவாக்கினார்
  • பிழைப்பிற்காக மலேசியா பர்மா போன்ற நாடுகளுக்கு சென்ற தமிழர்கள்  பலர் இப்படையில் இணைந்தனர்.
  • ஐ என் ஏ - வின் ஒற்றர் படை நீர் மூழ்கி கப்பல் மூலம் கேரளாவிற்கும் குஜராத்துக்கும் ஒற்றறிய அனுப்பப்பட்டது
  • நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய ராணுவத்தின் பொறுப்பை ஏற்க 91 நாட்கள் நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து, ஜெர்மனியிலிருந்து சிங்கப்பூர் வந்தார்
  • அவர் 1943 ஜூலை 9  ஐஎன்ஏ வின் தலைவராகப் பொறுப்பேற்றார்
  • நேதாஜியின் முழக்கம் டெல்லியை நோக்கிச் செல்லுங்கள் (டெல்லி சலோ).
  • பிரித்தானிய அரசை எதிர்க்க  ஐ என் ஏ விற்கு தமிழ்நாட்டில் பெரும்படை திரட்டித் தந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
  • இந்திய தேசிய ராணுவப் படையின் தலைவராக இருந்த தில்லான் இந்தியாவில் இந்திய தேசிய ராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள் என்றார்
  • இந்திய தேசிய ராணுவத்தில் 45 வீரர்கள் விமானப்படை சிறப்பு பயிற்சிக்காக ஜப்பான் இம்பீரியல் மிலிட்டரி அகாடமி சென்றனர்.  அந்த 45 பேர் கொண்ட பயிற்சி பிரிவின் பெயர் தான் டோக்கியோ கேடட்ஸ்
  • இக்குழு பர்மாவிலிருந்து காட்டு வழியாகச் சயாம் மரண ரயில் பாதையைக் கடந்து ஜப்பான் கியூசுப் தீவை அடைந்தனர். இந்தத் தகவல் பசும்பொன் மடல் 32 இதழ் 8 ஜனவரி 2018 ல் வெளிவந்தது

மகளிர் படை உருவாக்கம்

  • இந்திய தேசிய இராணுவத்தின் ஜான்சி ராணி பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது- தலைவர் டாக்டர் லட்சுமி
  • தமிழகத்தைச் சேர்ந்த பெண் தலைவர் & வீராங்கணைகள்  ஜான்சி, ராஜாமணி
  • நேதாஜி அமைத்த தற்காலிக அரசில் கேப்டன் லட்சுமி, சிதம்பரம் லோகநாதன், முதலான தமிழர்கள் அமைச்சர்களாக இருந்தனர்.
  • ஜப்பான் சென்ற 45 பேரில் குறிப்பிடத் தக்க தமிழர்கள் கேப்டன் தாசன், இவர் சுதந்திர இந்தியாவில் செசல்ஸ் நாட்டு தூதுவராகப் பணியாற்றினார்.
  • இரண்டாம் உலகப்போர்க் காலம் இந்திய தேசிய இராணுவம் ஜப்பானிய இராணுவத்தோடு சேர்ந்து, ஆங்கிலேயரோடு போரிடப் பர்மா வழியாக இந்தியா வரத் திட்டமிட்டது.
  • தமிழ் மக்கள் துணையுடன் போராடிய நேதாஜியைக் கண்டு ஆங்கிலப் பிரதமர் சர்ச்சில் கோபம் கொண்டார். 
  • மலேயாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது என்று சர்ச்சில் கூறினார். 
  • அதற்கு நேதாஜி இந்தத் தமிழினம்தான் ஆங்கிலேயர்களை அழிக்கும் என்று கூறினார்

நேதாஜியின் பொன் மொழி

  • அநீதிகளுக்கும் தவறான செயல்களுக்கும் மனம் ஒப்ப இடம் தருதல் மிகப் பெரிய குற்றமாகும். நீங்கள் நல்வாழ்வைத் தந்தே ஆக வேண்டும் என்பதுதான் காலத்தால் மறையாத சட்டமாகும். 
  • எந்த விலை கொடுத்தாவது சமத்துவத்திற்குப் போராடுவதே மிகச்சிறந்த நற்குணமாகும்.
  • மனதை மலரவைக்கும் இளங்கதிரவனின் வைகறைப் பொழுது வேண்டுமா? அப்படியானால் இரவில் இருண்ட நேரங்களில் வாழக் கற்றுக்கொள்.
  • விடுதலையினால் உண்டாகும் மகிழச்சியும் சுதந்திரத்தினால் உண்டாகும் மனநிறைவும் வேண்டுமா? அப்படியானால் அதற்கு விலையுண்டு. அவற்றுக்கான விலை துன்பமும் தியாகமும்தான்.

  • இரண்டாம் உலகப்போரில் பர்மாவில் நடந்த போரில் இந்திய தேசிய ராணுவம் 1944 மார்ச் 18 ஆங்கிலேயரை வென்று மணிப்பூர் பகுதியில் மொய்ராங் எனுமிடத்தில் மூவர்ண கொடியை ஏற்றியது. (இது நிலைக்கவில்லை)
  • இந்திய தேசிய ராணுவத்தின் 18 இளைஞர்கள் 1943 - 45 ஆகிய ஆண்டுகளில் சென்னை சிறையில் தூக்கிலிட்டனர்.
  • இராமு - 18 வயது - 1944 ல் – தூக்கிலிடப்பட்டார். நான் கடவுளுக்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை- எனக் கூறினார்
  • மரண தண்டனை பெற்ற அப்துல் காதர் -"பொருள் தெரிந்தால்தான் மனிதன் மேல் நிலை அடைவான்  நாட்டிற்காக உயிர் நீத்த முழு நிலவினை போன்ற தியாகிகள் முன்பு நாங்கள் மெழுகுவர்த்திகளே
  • பேராசிரியர் மா சு.  அண்ணாமலை "இந்திய தேசிய இராணுவம் தமிழர் பங்கு" நூலுக்குத் தமிழக அரசு விருது பெற்றார் 
  • இவர் குறும்படங்கள் சர்வதேச அளவில் பரிசுகள் பெற்றது.

 சீவக சிந்தாமணி

-திருத்தக்கத்தேவர்

  • ஏமாங்கத நாட்டு வளம்

 சொல்லும் பொருளும்:

  • தெங்கு          – தேங்காய்;                           இசைபுகழ்;
  • வருக்கை      – பலாப்பழம்;                        நெற்றி - உச்சி 
  • மால்வரை     – பெரியமலை;                     மடுத்து – பாய்ந்து
  • கொழுநிதி      - திரண்ட நிதி                         சூல்    – கரு
  • மருப்பு            – கொம்பு;                              வெறிமணம்;
  • கழனி             – வயல்;                                  செறிசிறந்த
  • அடிசில்          - சோறு;                                  மடிவுசோம்பல் 
  • கொடியனார் - மகளிர்                                 இரிய - ஓட
  • நற்றவம்        – பெருந்தவம்;                      வட்டம் - எல்லை
  • வெற்றம்        - வெற்றி 

 

சீவக சிந்தாமணி இலம்பகங்கள்

நாமகள் இலம்பகம் 

கோசரியார் இலம்பகம்

மண்மகள் இலம்பகம் 

கோவிந்தையார் இலம்பகம்

கனகமாலையார் இலம்பகம்

பூமகள் இலம்பகம் 

காந்தருவதத்தையார் இலம்பகம்

விமலையார் இலம்பகம் 

இலக்கணையார் இலம்பகம் 

குணமாலையார் இலம்பகம்

சுரமஞ்சரி இலம்பகம்

முத்தி இலம்பகம்

பதுமையார் இலம்பகம்

இலக்கண குறிப்பு

  • நற்றவம் =பண்புத்தொகை   
  • செய்கோலம் =வினைத்தொகை 
  • தேமாங்கனி (தேன்  போன்ற கனி) = உவமைத்தொகை 
  • இறைஞ்சி = வினையெச்சம் 
  • கொடியனார் =இடைக்குறை

பொதுவான குறிப்புகள்

  • சீவகசிந்தாமணி ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று
  • விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம்
  • உட்பிரிவு இலம்பகம், 13 இலம்பகங்கள் கொண்டது
  • மணநூல் என்றும் அழைக்கப்படுவது
  • ஆசிரியர் திருத்தக்கதேவர் சமண சமயத்தவர்
  • இவரது காலம் ஒன்பதாம் நூற்றாண்டு 
  • சீவகசிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக நரி விருத்தம் என்னும் நூலை இயற்றினார்.
  • ஏமாங்கத நாட்டு வளம்  நாமகள் இலம்பகத்தில் இடம்பெற்றுள்ளது

முத்தொள்ளாயிரம்

சேரநாடு

  • அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
    …. நச்சிலைவேல் கோக்கோதை நாடு.*       அணி – தற்குறிப்பேற்ற அணி

சோழநாடு

  • காவல் உழவர் களத்துஅகத்துப் போர்ஏற
    …….. நல்யானைக் கோக்கிள்ளி நாடு         அணி – உவமை அணி

பாண்டியநாடு

  • நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்
    ......நகைமுத்த வெண்குடையான் நாடு.       அணி – உவமை அணி

சொல்லும் பொருளும்: 

  • அள்ளல் – சேறு;                    பழனம் – நீர் மிக்க வயல்
  • வெரீஇ – அஞ்சி;                   பார்ப்பு – குஞ்சு.
  • நந்து – சங்கு;                       கமுகு – பாக்கு.
  • முத்தம் - முத்து;                     ‘நாவலோ’- நாள் வாழ்க என்பது போன்றது 
  • வாழ்த்து; இசைத்தால் – ஆரவாரத்தோடு கூவுதல்

இலக்கண   குறிப்பு

  • வெண்குடை, இளங்கமுகு            = பண்புத்தொகை
  • கொல்யானை, குவி மொட்டு = வினைத்தொகை 
  • வெரீஇ = சொல்லிசை அளபெடை 

முத்தொள்ளாயிரம்

  • பாவகை வெண்பா
  • சேர சோழ பாண்டியர்களைப் பற்றி 900 பாடல்கள் கொண்ட நூல் என்பதால் முத்தொள்ளாயிரம் எனப் பெயர் பெற்றது. நூல் முழுமையும் கிடைக்கவில்லை
  • புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து 108 செய்யுள்கள்  கிடைத்துள்ளன.
  • ஆசிரியர் பெயர் தெரியவில்லை
  • ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது
  • சேர நாட்டை அச்சமில்லாத நாடாகவும்
  • சோழ நாட்டை  ஏர்களச் சிறப்பும் போர்க்களச் சிறப்பும் உடைய நாடாகவும்
  • பாண்டிய நாட்டை முத்து உடைய  நாடாகக் கூறுகிறது

மதுரைக்காஞ்சி

  • மதுரையை சிறப்பித்து பாடியுள்ள நூல்களில் மதுரைகாஞ்சி முதன்மையானது

·        மண்உற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கின்

விண்உற ஓங்கிய பல்படைப் புரிசை 

..... மகிழ்ந்தோர் ஆடும் கலிகொள் சும்மை

ஓவுக் கண்டன்ன இரு பெரு நியமத்து.

சொல்லும் பொருளும்

  • புரிசை -மதில்                                   அணங்கு -தெய்வம் 
  • சில்காற்று- தென்றல்                      புழை -சாளரம்.
  • மாகால் -பெருங்காற்று                  முந்நீர் -கடல் 
  • பணை- முரசு                                   கயம் -நீர்நிலை
  •  ஓவு -ஓவியம்                                   நியமம் -அங்காடி

இலக்கணக்குறிப்பு 

  • ஓங்கிய          -பெயரெச்சம்
  • நிலைஇய     -சொல்லிசை அளபெடை 
  • குழாஅத்து    -செய்யுளிசை அளபெடை 
  • வாயில்          -இலக்கணப்போலி 
  • மாகால்          -உரிச்சொல் தொடர் 
  • முழங்கிசை, இமிழிசை -வினைத்தொகை 
  • நெடுநிலை, முந்நீர் -பண்புத்தொகை 
  • மகிழ்ந்தோர்    - வினையாலணையும் பெயர்
  • மதுரையில் வனவிலங்கு சரணாலயம் இருந்தது பற்றிக் கூறும் பாடல் 
  • "பொறி மயிர் வாரணம் ….
    கூட்டுறை வயமாப் புலியொடு குழும " (எனக் கூறியவர் மா ராசமாணிக்கனார் பத்துப்பாட்டு ஆராய்ச்சி)
  • பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மதுரைக்காஞ்சி
  • காஞ்சி என்பதற்க்கு  நிலையாமை என்பது பொருள்
  • மதுரையின் சிறப்பைப் பாடுவதாலும் நிலையாமை பற்றிக் கூறுவதாலும் மதுரைக்காஞ்சியெனப்  பெயர் பெற்றது
  • இது 782 அடிகள் கொண்டது இதில் 354 அடிகள் மதுரையை மட்டும் சிறப்பித்துக் கூறுகிறது
  • பெருகு வள மதுரைக் காஞ்சி எனக் கூறுவர்
  • பாட்டுடைத்தலைவன் தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.
  • ஆசிரியர் மாங்குடி மருதனார் பிறந்த ஊர் திருநெல்வேலி மாங்குடி 
  • எட்டுத்தொகையில் 13 பாடல்கள் பாடியுள்ளார்

சந்தை

கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி 

  • சந்தை 18 ஏக்கர் பரப்பளவு கொண்டது 
  • ஞாயிற்றுக்கிழமை கூடுகிறது 
  • 125 ஆண்டுகள் வயதான சந்தை 4 தலைமுறை நட்பு நிலவுகிறது
  • மாட்டுத்தாவணி = மாட்டு  சந்தை,  தாவணி என்றால் சந்தை என்று பொருள்
  • பகலில் செயல்படும் கடைவீதி நாளங்காடி இரவில் செயல்படும் கடைவீதிகள் அல்லங்காடி. அல் என்றால் இரவு, நாள் என்றால் பகல்.

புகழ்பெற்ற சந்தைகள்

  • மணப்பாறை            -மாட்டு சந்தை 
  • அய்யலூர்     -ஆட்டு சந்தை 
  • ஒட்டன்சத்திரம் =காய்கறி சந்தை  
  • நாகர்கோவில் தோவாளை = பூச்சந்தை 
  • ஈரோடு             = ஜவுளி சந்தை 
  • கடலூர் காராமணிக்குப்பம் = கருவாட்டு சந்தை.
  • நாகப்பட்டினம் =மீன் சந்தை.

 

  • பொதிய ஏத்தி வண்டியிலே
    பொள்ளாச்சி சந்தையிலே 
    விருதுநகர் வியாபாரிக்குச் செல்லக்கண்ணு நீயும் 
    வித்துப் போட்டுப் பணத்தை எண்ணு செல்லக்கண்ணு,   பாடலாசிரியர் மருதகாசி

ஆகுபெயர்

  • ஒன்றின் இயற்பெயர், அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்குத் தொன்றுதொட்டு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும். ஆகுபெயர்கள் 16 வகை

முல்லையை கொடுத்தாள் 

பொருளாகு பெயர் (முதலாகுபெயர்)  முதல் உறுப்பாகிய முல்லைக்கொடி அதன் சினை உறுப்பாகிய பூவுக்கு ஆகி வந்தது

வகுப்பறை சிரித்தது

இடவாகுபெயர் வகுப்பறை என்னும் இடப்பெயர் அங்குள்ள  மாணவர்களுக்கு ஆகி வருவது

கார் அறுத்தான்

காலவாகு பெயர் காலப்பெயர் அக்காலத்தில் விளையும் பயிருக்கு ஆகி வருவது.

மரிக்கொழுந்து நட்டான் 

சினையாகு பெயர் மரிக்கொழுந்து என்னும் சினைப்பெயர்  அதன் செடி ஆகி வந்துள்ளது

மஞ்சள் பூசினாள்- 

பண்பாகு பெயர் மஞ்சள் என்னும் பண்பு அவ்வண்ணத்தில் உள்ள கிழங்குக்கு ஆகி வந்துள்ளது

வற்றல் தின்றான் 

தொழிலாகு பெயர் வற்றல் என்னும் தொழிற்பெயர் வற்றிய உணவுப் பொருளுக்கு ஆகி வந்துள்ளது

வானொலி கேட்டு மகிழ்ந்தான் 

கருவியாகு பெயர் வானொலி என் கருதி அதன் காரியமாகிய நிகழ்ச்சிகளுக்கு ஆகி வந்துள்ளது

பைங்கூழ் குடித்தான்

காரியவாகு பெயர் கூறும் காரியம் அதன் கருவியாகிய பயிருக்கு ஆகி வந்துள்ளது

அறிஞர் அண்ணாவை படிக்கிறேன் 

கருத்தாவாகு பெயர் அறிஞர் அண்ணா என் கருத்தாவின் பெயர் அவர் இயற்றிய நூல்களுக்கு ஆகிவருகிறது

ஒன்று பெற்றால் ஒளி மயம்

எண்ணல் அளவை ஆகுபெயர் ஒன்று என்னும் எண்ணுப்பெயர், அவ்வெண்ணுக்குத் தொடர்புடைய குழந்தைக்கு ஆகி வந்தது. 

இரண்டே கிலோ கொடு 

எடுத்தலளவை ஆகுபெயர் நிறுத்தி அளக்கும் எடுத்தல் என்னும் அளவை பெயர் அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்துது 

அரை லிட்டர் வாங்கு -

முகத்தல் அளவை ஆகுபெயர்  முகத்தல் அளவை பெயர் அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்துள்ளது 

5 மீட்டர் வெட்டினான்

 

நீட்டலளவை நீட்டி அழைக்கும் நீட்டலளவை பெயர் அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது

 

  • வயலிடைப் புகுந்தாய் மணிக்கதிர் விளைத்தாய்
    வளைந் துசெல் கால்களால் ஆறே!
    அயலுள ஓடைத் தாமரை கொட்டி
    ஆம்பலின் இதழ்களை விரித்தாய்   
    - வாணிதாசன்.

கலைச்சொற்கள் அறிவோம்

  • இந்திய தேசிய ராணுவம்   -Indian National army
  • பண்டமாற்று முறை-           -Commodity exchange
  • காய்கறி  வடிசாறு               -vegetable soup
  • செவ்வியல் இலக்கியம்      -classical literature
  • கரும்புச்சாறு                        -sugarcane juice

அறிவை விரிவு செய்

  • ஆகாயத்துக்கு அடுத்த வீடு -மு மேத்தா
  • தமிழ் பழமொழிகள் - கி. வா. ஜகந்நாதன் 
  • இருட்டு எனக்குப் பிடிக்கும் (அன்றாட வாழ்வில் அறிவியல்)- ச. தமிழ்ச்செல்வன்.

சாலைகள்

  • தேசிய நெடுஞ்சாலைகள் (national highways) நாட்டின் முக்கிய நகரங்கள், துறைமுகங்கள், சுற்றுலாத்தலங்கள் போன்றவற்றினை இணைப்பவை
  • மாநில நெடுஞ்சாலைகள் (state main roads) தேசிய நெடுஞ்சாலைகள் மாநிலங்களோடு இணைப்புமாவட்டத்தின் தலைநகர், சுற்றுலா தலங்கள், மாவட்டத்தின் சிறுநகரங்கள்  ஆகியவற்றை இணைக்கிறது
  • சிற்றூர் சாலைகள்(village roads) இந்தியாவின் நாடித் துடிப்பாக விளங்குபவை  சிற்றூர்களே அவற்றைத் தேசிய நீரோட்டத்தோடு இணைப்பவை.
  • தமிழ்நாட்டில் இரு சக்கர ஊர்திகளில் 50 கி. மீ வேகத்திலும் நான்கு சக்கர ஊர்திகள்  60 கி.மீ வேகத்தில் செல்லலாம் என்பது பொதுவிதி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.