Type Here to Get Search Results !

இயல் 5 தமிழ் 9ம் வகுப்பு கசடற மொழிதல்-IYAL-5-9TH-TAMIL-NOTES-KASADARA-MOZHITHAL

 இயல் 5
தமிழ் 9ம் வகுப்பு

கசடற மொழிதல்

Table of contents(toc)

 

கல்வியில் சிறந்த பெண்கள்

சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் 

·   ஒக்கூர் மாசாத்தியார், ஆதிமந்தியார், பொன்முடியார், அள்ளூர்  நன்முல்லையார், நக்கண்ணையார், காக்கைபாடினியார், வெள்ளிவீதியார், காவற்பெண்டு, நப்பசலையார்.

பக்தி இயக்கக் கால பெண் புலவர்கள்

·   காரைக்கால் அம்மையார் 

·   ஆண்டாள்

முத்து லட்சுமி 1886 - 1968

·   தமிழகத்தின் முதல்  பெண் மருத்துவர் 

·   இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் 

·   சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் 

·   சட்ட மேலவையில் முதல் பெண்மணி

·   தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை சட்டம், குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் ஆகிய சட்டங்கள் நிறைவேறக் காரணமாக இருந்தவர்.

·   இவர் 1930 அடையாறு- அவ்வை இல்லம் தொடங்கினார். 1952 புற்றுநோய் மருத்துவமனை அடையாறில் நிறுவினார்

மூவாலூர் ராமாமிர்தம் (1883-1962)

·   தமிழகத்தின் சமூக சீர்திருத்தவாதி மற்றும் எழுத்தாளர்,

·   தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறக் காரணமானவர்

·   தமிழக அரசின் 8 வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்குத் திருமண உதவி இவர் பெயரால் வழங்கப்படுகிறது.

பண்டித ரமாபாய்  1858- 1922

·   தடையை மீறிக் கல்வி கற்று  பண்டிதர் ஆகியவர்

·   ஹண்டர் குழு 1882 ல் முதன் முதலில் பெண் கல்விக்கு பரிந்துரை செய்தது

·   மராட்டியத்தில் ஜோதிராவ் பூலே  சாவித்திரிபாய் புலே  இணைந்து 1882 ல் முதல் பெண் பள்ளியைத் தொடங்கினார்.

ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் 1870-1960

·   தமிழகம் வந்து மருத்துவராகி வேலூரில் இலவச மருத்துவம் செய்தார்.

·   2014 இல் நோபல் பரிசு பெற்றவர் கைலாஷ் சத்யார்த்தி

·   பாகிஸ்தானில் பெண்கள் கல்விக்கு போராட்டக் களம் இறங்கிய மலாலாவின் வயது 12 (1997).

சாவித்திரிபாய் பூலே  1831- 1897 

·   இவர் 1848 ல் பெண்களுக்கெனத் தொடங்கப்பட்ட பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார் 

·   இவர் நாட்டின் முதல் பெண் ஆசிரியர்.

பெண்கல்வி ஊக்குவிப்பு திட்டங்கள்

·   ஈவேரா  நாகம்மை இலவசக் கல்வி உதவித்திட்டம்- பட்டமேற்படிப்பு 

·   சிவகாமி அம்மையார் கல்வி உதவித் திட்டம் கல்வி திருமண உதவி ஆகியவற்றோடு தொடர்புடையது

தனித் தமிழில் சிறந்த நீலாம்பிகை அம்மையார் 1903 -1943

·   மறைமலை அடிகளின் மகள்

·   தனித்தமிழ் கட்டுரை வடசொல் தமிழ் அகராதி மூன்று பெண்மணிகள் வரலாறு பட்டினத்தார் பாராட்டிய மூவர் இவரின் நூல்கள்

கோத்தாரி கல்வி குழு 1964 

·   கோத்தாரி கல்வி குழுப் பரிந்துரை மகளிர் கல்வியை வலியுறுத்தியது

சாரதா சட்டம் 

·   பெண் முன்னேற்றத்திற்கு தடை குழந்தைத் திருமணம் அதைத் தடுக்க 1929 சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது

ஈ.த. ராஜேஸ்வரி அம்மையார் 1906-1955 

·   திருமந்திரம், தொல்காப்பியம், கைவல்யம் நூல்களில் அறிவியல் உண்மையை எடுத்துக் கூறியவர்.

·   ராணி மேரி கல்லூரியில் அறிவியல் பேராசிரியராகப் பணியாற்றினார்

·   சூரியன்  பரமாணு புராணம் - அறிவியல் நூல்கள் எழுதியுள்ளார்.

 

குடும்ப விளக்கு

சொல்லும் பொருளும்:


·   களர்நிலம்        - பண்படாத நிலம்,

·   நவிலல்            – சொல்லல்.

·   வையம்            – உலகம்;

·   மாக்கடல்         – பெரிய கடல்,

·   இயற்றுக         – செய்க;

·   மின்னாளை    – மின்னலைப் போன்றவளை;

·   மின்னாள்        – ஒளிரமாட்டாள்.

·   தணல்             நெருப்பு;

·   தாழி                  - சமைக்கும் கலன்;

·   அணித்து         – அருகில்

·   தவிர்க்கஒணா – தவிர்க்க இயலாத

·   யாண்டும்         – எப்பொழுதும்.


இலக்கணக்குறிப்பு

·   மாக்கடல்          -உரிச்சொற்கள் 

·   ஆக்கல்            -தொழில் பெயர் 

·   பொன்னே போல் -  உவம உருபு 

·   மலர்க்கை        -உவமைத்தொகை

·   தவிர்க்கவோணா - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்.

பொதுவானக் குறிப்புகள்

·   குடும்ப விளக்கு குடும்ப உறவுகள் அன்பு பற்றி உணர்த்துவது.

·   குடும்ப விளக்கு 5 பகுதிகள் கொண்டது இரண்டாம் பகுதி தலைப்பு விருந்தோம்பல்

·   பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம் 

·   பாரதியின் மீது கொண்ட ஈர்ப்பால் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார் 

·   பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, தமிழியக்கம், படைப்புகள்

·   இவர் இயற்றிய கவிதைகள் பாவேந்தர் பாரதிதாசன்  கவிதைகள் எனத் தொகுக்கப்பட்டுள்ளது 

·   சாகித்ய அகாடமி விருது பெற்ற நாடக நூல் பிசிராந்தையார்

·   பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் - பாரதி

·   மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா - கவிமணி

·   பெண் எனில் பேதை என்ற எண்ணம் என் நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்படல் என்பது சரிபடாது - பாவேந்தர்.

 

சிறுபஞ்சமூலம்

·   பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,

மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,  - காரியாசான்

·   அணி: எடுத்துக்காட்டு உவமையணி.

இலக்கணக் குறிப்பு

·   அறிவார், வல்லார்- வினையாலணையும் பெயர்கள்

·   விதையாமை, உரையாமை – எதிர்மறைத் தொழிற்பெயர்கள்

·   தாவா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பொதுவானக் குறிப்புகள்

·   சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு நூல்

·   சிறுபஞ்சமூலம்-ஐந்து சிறிய வேர்கள் என்பது இதன் பொருள். அவை  கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி

·   ஒவ்வொரு பாடலிலும்  ஐந்து கருத்துகள் உடையது.

·   சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசான், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர். 

·   காரி என்பது இயற்பெயர். ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்தபெயர். 

·   மாக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் இவரைக் கூறுகிறது.

மற்ற குறிப்புகள்

·   வள்ளலார்  -10 வயதிற்குள் சொற்பொழிவு செய்தவர்

·   பாரதியார் -11 வயதில் அரசவையில் கவிதை பாடி பாரதி பட்டம் பெற்றவர்

·   விக்டர் ஹியூகோ - 15 வயது பிரண்ட்ஸ் இலக்கிய கழகத்துக்கு கவிதைகளை எழுதி அனுப்பும்போது

·   மாவீரன்  அலெக்சாண்டர்  - 16 வயது தந்தையின் போர்படை தளபதி ஆனபோது

·   அறிவியலாளர் கலிலியோ- 17 வயது பைசா நகர சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து ஆராய்ந்தவர்

 

வீட்டுக்கோர் புத்தகசாலை

·   "நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் சிறந்த நண்பன்" - ஆபிரகாம் லிங்கன்.

·   2009 ஆம் ஆண்டு நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கபட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது. 

·   2010ஆம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத் தமிழ்நாடு அரசு உருவாக்கியது.

பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் 

1.     மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு.

2.    கத்தியைத் தீட்டாதே உன் தன் புத்தியைத் தீட்டு. வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி ஆகும்.

3.    எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.

4.     சட்ட ம் ஒரு இருட்டறை – அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு.

5.    மக்களின் மதியைக் கெடுக்கும் ஏடுகள் நமக்குத் தேவையில்லை; தமிழரைத் தட்டி எழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை;

6.    தன்னம்பிக்கை ஊட்டி மதிப்பைப் பெருக்கும் நூல்கள் தேவை.

7.    நல்ல வரலாறுகளைப் படித்தால்தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும்.

8.   இளைஞர்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை.

9.    இளைஞர்கள் உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முனைகள்.

10. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

மற்ற குறிப்புகள் – முனைவர் பெ. குமார் – அண்ணாவின் சிறுகதை திறன்

·   வீட்டுக்கு ஒரு புத்தகசாலை  என்பது பேரறிஞர் அண்ணாவின் வானொலி உரை தொகுப்பு

·   தென்னகத்து பெர்னாட்ஷா அண்ணா

·   சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்  முதல்  இன்ப ஒளி வரை இவரின் பல படைப்புகள்

·   சென்னை பெத்தநாயக்கன்பேட்டை கோவிந்தநாயக்கன்  பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஓராண்டு (1935) பணியாற்றினார்

·   ஹோம் ரூல், ஹோம் லேண்ட், நம்நாடு, திராவிடநாடு, மாலை மணி, காஞ்சி இதழ்களின் ஆசிரியர்

·   குடியரசு, விடுதலை ஆகிய இதழ்களின் துணை ஆசிரியர்

·   சென்னை மாகாணத்தைத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றினார்

·   இரு மொழிச் சட்டத்தை உருவாக்கினார்

புகழுக்குரிய நூலகம்

·   ஆசியாவிலேயே மிகப் பழமையான  நூலகம் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச் சுவடிகள் பாதுகாக்கப்படுகிறது 

·   உலக அளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம் கன்னிமரா நூலகம் சென்னை எழும்பூர் 

·   இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் திருவனந்தபுரம் நடுவண் நூலகம் 1836 இல் தொடங்கப்பட்டு 1953இல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது -தேசிய நூலகம் இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் ஆகும்.  இது ஆவணக்காப்பக  நூலகம். 

·   உலகின் மிகப்பெரிய நூலகம் அமெரிக்காவில் உள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸ்

·   வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தகசாலை தரப்பட வேண்டும் அறிஞர் அண்ணா

·   உலகின் சாகாவரம்  பெற்ற பொருள்கள் புத்தகங்கள்-கதே

·   சீர்காழி இரா அரங்கநாதன் பிறந்தநாள்  ஆகஸ்டு 8, தேசிய நூலக நாள்.

 

இடைச்சொல்உரிச்சொல்

·   பெயர்ச் சொற்கள், வினைச் சொற்கள் ஆகியவற்றைப் போல இடைச்சொற்கள் தமிழில் மிகுதியாக இல்லை. 

·   இடைச்சொற்கள் , பெயரையும், வினையையும் சார்ந்து இயங்கும் இயல்பை உடையன; தாமாகத் தனித்து இயங்கும் இயல்பை உடையன அல்ல என்கிறார் தொல்காப்பியர்.

இடைச்சொற்களின் வகைகள்

·   வேற்றுமை உருபுகள்              = , ஆல், கு, இன், அது, கண்

·   பன்மை விகுதிகள்                 = கள், மார்

·   திணை, பால் விகுதிகள்        =ஏன், ஓம், ஆய், ஈர்(கள்), ஆன், ஆள், ஆர், ஆர்கள் து,

·   கால இடைநிலைகள்            =கிறு, கின்று.

·   பெயரெச்ச, வினையெச்ச விகுதிகள் =அ, , , மல்,

·   எதிர்மறை இடைநிலைகள்   = , அல், இல்

·   தொழிற்பெயர் விகுதிகள்     = தல், அம், மை

·   வியங்கோள் விகுதிகள்         = , இய

·   சாரியைகள்                             =அத்து, அற்று, அம், …

·   உவம உருபுகள்                        = போல, மாதிரி

·   இணைப்பிடைச் சொற்கள் =உம், அல்லது, இல்லையென்றால், ஆனால், ஆகவே, ஆயினும், எனினும்,

·   தத்தம் பொருள் உணர்த்தும் இடைச் சொற்கள்= உம், , , தான், மட்டும், ஆவதுகூட, , ஆம்

·   சொல்லுருபுகள்                      = மூலம், கொண்டு, இருந்து, பற்றி, வரை

·   வினா உருபுகள்                      =,

உம்

·   உம் - இடைச்சொல் எதிர்மறை, சிறப்பு, ஐயம், எச்சம், முற்று, அளவை, தெரிநிலை, ஆக்கம் என்னும் பொருள்களில் வரும்.

·   மழை பெய்தும் புழுக்கம் குறையவில்லை.(எதிர்மறை உம்மை)

·   பாடகர்களும் போற்றும் பாடகர். (உயர்வுச் சிறப்பு)

·   ஓகார இடைச்சொல் ஒழியிசை, வினா, சிறப்பு (உயர்வு, இழிவு), எதிர்மறை, தெரிநிலை, கழிவு, பிரிநிலை, அசைநிலை ஆகிய 8 பொருளில் வரும் -நன்னூல்.

·   தற்காலத்தில் ஓகார இடைச்சொல் பிரிநிலைப் பொருளில் அதிகமாக வருகின்றது. அதைத் தவிர ஐயம், உறுதியாகக் கூறமுடியாமை, மிகை, இது அல்லது அது, இதுவும் இல்லை - அதுவும் இல்லை போன்ற பொருள்களிலும் வருகின்றன.

·   இன்றைக்கு மழை பெய்யுமோ? (ஐயம்)

·   பூங்கொடியோ மலர்க்கொடியோ பேசுங்கள். (இது அல்லது அது)

·   பாலுவோ கண்ணனோ பேசாதீர்கள்(இதுவும் இல்லை - அதுவும் இல்லை)

 

·   பிரிநிலை, வினா, எண், ஈற்றசை, தேற்றம், இசைநிறை -ஆறு பொருள்களில் வரும்- நன்னூல். 

·   தற்காலத்தில் ஏகாரம் தேற்றப் பொருளில் (அழுத்தம்) மட்டுமே வருகிறது. 

·   அண்ணல் காந்தி அன்றே சொன்னார்.

·   நடந்தே வந்தான்.

 

தான்

·   தான் அழுத்தப் பொருளில்தான் வரும். சொற்றொடரில் எந்தச் சொல்லுடன் வருகிறதோ, அதனை முதன்மைப்படுத்துகின்றது. 

·   ஒரு சொற்றொடரில் ஒருமுறை மட்டுமேவருகிறது.

·   நிர்மலாதான் நேற்று விழாவில் பாடினாள்.

·   நிர்மலா நேற்று தான் விழாவில் பாடினாள்.

·   நிர்மலா நேற்று விழாவில் தான் பாடினாள்..

·   நிர்மலாதான் பாடினாள். (தான் – இடைச்சொல்)

·   நிர்மலா தானும் பாடினாள். (தான் – தற்சுட்டுப் படர்க்கை ஒருமை இடப்பெயர் – பெயர்ச்சொல்)

மட்டும் 

·   வரையறைப் பொருள் தருகிறது. முடிந்த வரை, குறிப்பிட்ட நேரம்வரை என்னும் பொருள்களிலும் வருகிறது.

·   படிப்பு மட்டும் இருந்தால் போதும். (வரையறைப் பொருள்)

ஆவது 

·   இது பல பொருள்களில் வரும்.

·   ஐந்து பேராவது வாருங்கள் (குறைந்த அளவு) அவனாவது எவனாவது செய்துமுடிக்க வேண்டும் (அது அல்லது இது)

கூட 

·   என்னிடம் ஒரு காசு கூட இல்லை (குறைந்தபட்சம்)

·   தெருவில் ஒருவர் கூட நடமாட  வில்லை (முற்று பொருள்)

 

·   வினாப் பொருளில் வரும் இடைச்சொல்

·   ஆ என்னும் இடைச்சொல், சொற்றொடரில் எந்தச் சொல்லுடன் இணைந்து வருகிறதோ அது வினாவாகிறது.

·   புகழேந்தி நேற்று உன்னுடன் பேசினானா?

·   புகழேந்தி நேற்று உன்னுடனா பேசினான்?

ஆம்

·   சொற்றொடரின் இறுதியில் வந்து இசைவு, சத்தியம், பொருத்தம் ஆகிய பொருள்களில் வரும்.

·   தகவலாகவும், வதந்தியாகவும் செய்தியைக் கூறுவதற்கும் பயன்படும்

·   உள்ளே வரலாம் - இது இசைவு

·   இனியவன் தலைநகர் போகிறானாம் -தகவல் 

·   பறக்கும் தட்டு நேற்று பறந்ததாம் - வதந்தி பொய் மொழி

 

அன்று என்பது ஒருமைக்கும் அல்ல என்பது  பன்மைக்கும்  உரியது

·   அது பழம் அன்று, அவை பழங்கள் அல்ல

 

எத்தனை என்பது எண்ணிக்கையைக் குறிக்கும் 

எத்துணை என்பது அளவையும் காலத்தையும் குறிக்கும்

·   எத்தனை நூல்கள் வேண்டும்

·   எத்துணை பெரிய மரம்.  எத்துணை ஆண்டு பழமையானது.

உரிச்சொற்கள்

·   குறிச்சொற்கள் பொது பெயர்களையும் வினைகளையும் சார்ந்து பொருள் தருபவை

·   உரிச்சொற்கள் இசை குறிப்புப் பண்பு பொருளில் வரும்

·   உரிச்சொற்கள் ஒவ்வொன்றும் தனித்த பொருளுடையது

·   ஆனால் இவை தனித்து வழங்கப்படுவதில்லை

·   உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என நன்னூலார் கூறுகிறார்

 

ஒரு சொல் பலபொருள்களுக்கு உரியது

·   கடிமலர் மணம்= மிக்க மலர் 

·   கடி நகர் = காவல் மிக்க நகர் 

·   கடிவிடுதும் =விரைவாக விடுவோம் 

·   கடி நுனி =கூர்மையான நுனி

 

பல சொல் ஒரு பொருள்

·   உறு, தவ, நனி என்பது மிகுதியெனப் பொருள்

·   உறுபசி, தவச் சிறிது, நனி நன்று

 

உரிச்சொல் இருந்து தற்கால சொற்களின் பிறப்பு

·   மழ, குழ- மழலை (குழந்தை)

·   உவப்பு (உவமை), பசப்பு (நிறம் மங்குதல்) பயப்பு (பயன்)செழுமை =செழிப்பு, செறித்த, செழிக்கும் எனப் பெயராகவும் வினையாகவும் பயன்படுகிறது

·   விழுமம் = விழுப்பம்,விழுங்குதல், விழுமிய பெயர் மற்றும் வினையாகப் பயன்படுகிறது

கலைச்சொல் அறிவோம்

·   சமூக சீர்திருத்தவாதி – Social Reformer 

·   தன்னார்வலர் – Volunteer 

·   களர்நிலம் – Saline Soil 

·   சொற்றொடர் - Sentence

அறிவை விரிவு செய்

·   ஓய்ந்திருக்கலாகாது – கல்விச் சிறுகதைகள் (தொகுப்பு: அரசி -ஆதிவள்ளியப்பன்)

·   முதல் ஆசிரியர் – சிங்கிஸ் ஐத்மாத்தவ்

·   கல்வியில் நாடகம் – பிரளயன்

     ·   மலாலா - கரும்பலகை யுத்தம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.